ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (09:56 IST)

சூனியம் எடுப்பதாக சொல்லி பெண்ணின் உடல் முழுவதும் சூடு போட்ட போலி சாமியார்!

ராஜஸ்தான் மாநிலத்தில் மூடநம்பிக்கையால் பெண் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்த மத்திய வயது பெண் தனது குடும்பத்துக்கு தொடர்ந்து கஷ்டங்களாக வருவதாக சொல்லி அந்த பகுதியில் இருக்கும் பெண் சாமியாரான சந்தோஷி தேவி என்பவரிடம் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாக சொல்லிய சந்தோஷி 1000 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மறுநாள் வர சொல்லியுள்ளார்.

மறுநாள் அந்த பெண் சென்ற போது சூனியம் எடுப்பதாக சொல்லி பழுக்க காய்ச்சிய கம்பியால் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். வலியால் அலறிய அந்த பெண் இப்போது மருத்துவமனையில் தீக்காயங்களுக்காக சிகிச்சைப் பெற்று வருகிறார். போலி சாமியார் என மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.