1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (18:41 IST)

காதலுக்கு தூது போன பெண்ணை நிர்வாண ஊர்வலம் அழைத்து சென்ற கும்பல்...

தனது சகோதரரின் காதலுக்கு தூதுபோன ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரம் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரங்கேறியுள்ளது.


 

 
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள சக்லம்பா கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண், தனது சகோதரருக்கும், பக்கத்து கிராமத்த்தில் உள்ள ஒரு சிறுமிக்கும் இடையே காதல் தூதுவராக இருந்துள்ளார். இந்த விவகாரத்தை தெரிந்து கொண்ட அந்த சிறுமியின் வீட்டார், காதலுக்கு உதவியாக இருந்த பெண்ணையும், அவரது கணவரையும் ஊர் மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வைத்தனர். 
 
அதன் பின்பும் ஆத்திரம் தீராத அப்பெண்ணின் குடும்பத்தினர், கடந்த 4ம் தேதி, அப்பெண்ணின் கணவர் வெளியே சென்றிருந்த நிலையில், அப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணை அடித்து உதைத்தனர். மேலும், அவரை நிர்வாணமாக்கி வெளியே அழைத்து வந்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றனர். 
 
இந்த சம்பவம் அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த சம்பவத்திற்கு காரணமான 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.