வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2016 (18:02 IST)

பழைய ரூபாய் நோட்டு விவகாரம்: சிறை தண்டனை வாபஸ்

டிசம்பர் 31ஆம் தேதியில் இருந்து பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் குறைந்தப்படசம் அபராதமாக ரூ.10,000 விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 


 

 
மார்ச் 31ஆம் தேதிக்கு பின் பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால், வைத்திக்கும் தொகையில் இருந்து 5 மடங்கு அபராதம் மற்றும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. 
 
தற்போது சிறை தண்டனையை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. அதற்கு பதிலாக குறைந்தப்பட்சம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த அவசர சட்டம் டிசம்பர் 31ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.