1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 8 ஜூலை 2014 (11:27 IST)

குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற காவல்துறை அதிகாரி

உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை காவல்துறை காவலர், குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்றுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா நகர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் ஒன்றில் அப்பகுதியில் குப்பை பொறுக்கும் 11 வயது சிறுமி தனியாக படுத்திருந்தார்.

மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அவளை நெருங்கிய ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை காவல்துறை கான்ஸ்டபிள் விகாஸ் என்பவர் அந்த சிறுமியை கற்பழிக்க முயன்றார்.

தூக்கத்தில் இருந்த அந்த சிறுமி பதறிப் போய் விழித்து கூச்சல் போட்டதையடுத்து பிற பிளாட்பாரங்களில் பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினர் அங்கு ஓடி வந்தனர்.

அவர்களில் ஒருவர் விகாசை விரட்டிச் சென்ற போது, தப்பியோடி, மதுரா ரயில் நிலைய வளாகத்தில் உள்ள காவலர்கள் தங்கும் அறைக்குள் புகுந்து கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அந்த சிறுமி அளித்த வாக்கு மூலத்தைப் புகாராக பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர், விகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிடிபட்ட விகாஸ் ஏற்கனவே 24 மணி நேரம் சிறையில் அடைபட்டு கிடந்ததால், அரசு ஊழியர் நன்நடத்தை விதிகளின்படி, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மதுரா நகர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றது, சமீபத்தில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் வன்முறை செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.