வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (12:42 IST)

காதல் திருமணம் செய்துகொண்ட மகளை கௌரவக் கொலை செய்த தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, அவரது தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

சம்பல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, அவரது தந்தையே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரௌலி நகரத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை தனது 22 வயது மகளை, அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இது குறித்து விசாரித்த காவல்துறையினர், மகள் வேறு பிரிவைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டதால், கௌரவத்துக்காக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.