வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (12:58 IST)

உத்திரப்பிரதேசத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 3 குழந்தைகள் பலி

உத்திரப்பிரதேசத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 
 
உத்தரபிரதேச மாநிலம் முஷாபர் நகரில் தான் இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. இந்த கோர விபத்தில் அந்த வீடே முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதில் மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
 
எரிவாயு கசிவே விபத்திற்கான காரணம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் இடையே சிக்கிய குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பலத்த காயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறி மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் முஷாபர்நகரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.