வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2016 (21:48 IST)

நாளை வழக்கம் போல் வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி

நாளை முதியோர்களுக்கு மட்டுமே வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என்று இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் கூறியதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

 
பழைய ரூ.500,1000 ரூபாய் நோட்டுகளை நாளை வங்கிகளில் மாற்ற முடியாது. முதியோர்களுக்கு மட்டுமே நாளை பழைய நோட்டுக்கு மாற்றித்தரப்படும் என்று இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் கூறினார்.
 
ஆனால் ரிசர்வ் வங்கி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கிகளில் நாளை வழக்கம் போல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.