1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (19:15 IST)

வாக்குப் பதிவு எந்திரங்கள் மீது சந்தேகம் இல்லை : பிரபல கட்சி தலைவர்

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடப்பதாக எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான புகார்களை கூறிவந்தனர் .வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள மையங்களிலிருந்து எந்திரங்கள் வேறு இடங்களுக்குக் கடத்தப்படுவதாகவும் புகார்கள் வெளியாகின.
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.சி பல்லா ரஜேஷ்வர ரெட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து கருத்து கூறியுள்ளார்.
 
அவர் தெரிவித்துள்ளதாவது :
 
வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து எங்கள் கட்சிக்கு சந்தேகம் இருந்தது.ஆனால் அடுத்து நாங்கள் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் வாக்குப்பதிவு எந்திரஙகள் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. மேலும் தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர். அதனால் வெற்றி வந்தாலும் சரி ! தோல்வி வந்தாலும் சரி அதை ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.