1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (15:21 IST)

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்றதாக உள்ளது – ப. சிதம்பரம்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்றதாக உள்ளது – ப. சிதம்பரம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டடதை அடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் பல சலுகைகளை மக்களுக்கு அறிவித்திருந்தார். இதற்கு  பாரத  பிரதமர் மோடி  தனது டுவிட்டர் பக்கத்தில்  ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பாராட்டுகள் தெரிவித்தார். இந்நிலையில்,   காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் ரெப்போ  விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியிம்ன் அறிவிப்புக்கு  வரவேற்பு தெரிவித்ததுடன் வங்கிகள் மக்களுக்கு கடன் வழங்காமல் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் பல சலுகைகளை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார். அப்போது பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.


சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ள சலுகைகள்:


 
  • மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான மாதத்தவணைகளும் கட்டத் தேவையில்லை
  • மேலும் தனியார் வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டிவிகிதம் 5.1 ல் இருந்து 4.4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.
  • ரெப்போ வட்டிக் குறைந்ததால் மாதத்தவணை தொகை குறைய வாய்ப்பு என தெரிவித்திருந்தார். மேலும் மக்களுக்கு கடன் வழங்குவதை வங்கிகள் குறைக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.
  •  
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கூறியதாவது :

பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரொபோ வட்டி விகிதத்தை குறைத்து நடவடிக்கையை  வரவேற்கிறேன்.

ஆனால், இ.எம்.ஐ தேதிகளை ஒத்தி வைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்ற நிலையில் உள்ளது. மேலும் இ.எம்.களை செலுத்துவற்கான அனைத்து தேதிகளும் ஒத்தி வைக்க வேண்டும் என்பதே கோரிக்கை என  தெரிவித்துள்ளார்