1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (21:06 IST)

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்!

delhi
டெல்லியில் தாய் கண்முன்னே மகனை ஒருவர் முன்பகை காரணமாக கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜேஜே காலனியில் 16 வயது சிறுமியை ஒரு இளைஞர் கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்தார். அந்த சிறுமியை 20 – 30 முறை கத்தியால் குத்தியும் ஆத்திரம் தீராமல், ஒரு பெரிய கல்லை எடுத்து , சிறுமியின் தலையின் மீண்டும் மீண்டும் தூக்கிப் போட்டு கொன்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நந்த் நாக்ரி பகுதியில் தாய் முன்னே மகனை ஒருவர் முன்பகை காரணமாக கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.