1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (18:18 IST)

3 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூர இளைஞன்...

ராஜஸ்தான் மாநிலத்தின்  உள்ள ஜலாவரில் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி  பள்ளிக்கூடம் முடிந்த பின் வீட்டுக்கு திரும்பினார். ஆவால் ஆடுகள் மேய்க்க சென்றவர் வீடு திரும்ப வில்லை. கடந்த புதன் கிழமை அன்று கடுகு வயலில் பிணமாக கிடந்துள்ளார்.அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சிறுமியின் மரணம் குறித்து ஊருக்குள் தகவல் பரவியவுடன் அதே கிராமத்தை சேர்ந்த 20 வயது இளைஞன் மின்வயரை பிடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளான். கடந்த செவ்வாய் கிழமை அன்றுதான் இளைஞன் சிறுமியுடன் இருந்ததைப் பார்த்ததாக சில கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் சிறுமியை கொன்றதால் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில்தான் இளைஞன் தற்கொலைக்கு முயன்றுள்ளான் என செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சிறுமி பலாத்கரம் செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.