வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 7 ஜூன் 2017 (05:45 IST)

சிவபெருமான் கனவு எதிரொலி: தேசிய நெடுஞ்சாலையில் குழிதோண்டிய பக்தர் கைது

தெலுங்கானா மாகாணத்தில் உள்ள ஒரு சிவபக்தர் ஒருவர் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் குழிதோண்டி பரபரப்பை ஏற்படுத்தியதால் கைது செய்யப்பட்டார்.





தெலுங்கானாவின் ஜான்கான் மாவட்டம் பெம்பார்தி கிராம் பகுதியை சேர்ந்த லகான் மனோஜ் என்ற சிவபக்தரின் கனவில் ஹைதராபாத் - வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் சிவலிங்கம் இருப்பதாக சிவபெருமான கூறினாராம். உடனே இந்த விஷயத்தை அவர் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

அந்த அதிகாரியும் அவர் சொன்ன இடத்தில் குழிதோண்ட அனுமதித்துள்ளார். சுமார் 8 அடிக்கும் மேல் குழிதோண்டியும் எந்த லிங்கமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத் - வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் குழிதோண்டியதால் டிராபிக் நெருக்கடி ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குழிதோண்டிய பக்தரையும், குழிதோண்ட அனுமதித்த கிராம நிர்வாக அதிகாரியையும் போலீசார் கைது செய்தனர்.