வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 2 ஏப்ரல் 2015 (09:35 IST)

தெலங்கானாவில் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

தெலங்கானாவில் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர்.
 
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 
 
அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள், அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், இசம்பவம் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.