செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 10 மே 2019 (11:00 IST)

அயோத்தி நிலச் சர்ச்சை விவகாரம் – உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு !

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட மத்தியஸ்த குழுவுக்கு ஆகஸ்ட்15 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் சர்சைக்குறிய நிலத்தை  3 அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  இதனால் 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு தொடர்பாக தங்களுக்கு மேலும் அவகாசம் வேண்டும் எனக் கேட்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 15 வரை அவகாசம் அளித்துள்ளது.