செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 ஜூன் 2018 (15:33 IST)

நடிகர்களை அரசியலை விட்டு தள்ளிவைக்க வேண்டும்: சு.சுவாமி!

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இதன் பின்னர் இந்த சந்திப்பை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
அவர் கூறியது பின்வருமாறு, தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாகிவிட்டதை குறித்து பேசினோம். ஆளுநர் மாளிகையின் செலவை ஆறில் ஒரு பங்காக குறைத்து உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு வாழ்த்து கூறினேன். 
 
தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆட்சி திமுகவை விட நன்றாக உள்ளது. தமிழகத்தில் நக்சலைட், விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களால் தீவிரவாதம் அதிகரித்து உள்ளது. 
 
தூத்துக்குடி போராட்டத்தில் பயங்கரவாதிகள் இருந்தார்களா என்று விசாரணை அறிக்கையை பார்த்த பின் தான் சொல்ல முடியும். அதே போல், நடிகர்களை அரசியலில் இருந்து சற்று தள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.