வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (13:25 IST)

பாஜக மாணவர் அமைப்பால் பாலியல் மிரட்டல்: கார்கில் போர் வீரர் மகள் புகார்!!

பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.க்கு எதிராக பிரசாரம் செய்ததால் பலாத்கார மிரட்டல் வருவதாக மாணவி ஒருவர் புகாரலித்துள்ளார்.


 
 
டெல்லி பல்கலைக் கழக மாணவியும் கார்கில் போரில் உயிர்நீத்த மாவீரர் கேப்டன் மன்தீப் சிங் மகளுமான குர்மேகர் கவுர் இந்த புகாரை அளித்துள்ளார்.
 
பாரதிய ஜனதா கட்சி இந்த நாட்டை அழித்துவிடும். பாஜக குண்டர்களுக்கு எதிராக ஒவ்வொருவரும் போராட வேண்டும். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதால் நிறைய மிரட்டல்கள் வருகின்றன. என்னை பலாத்காரம் செய்யப் போவதாகவும் கூட மிரட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார்.