வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 15 ஜூலை 2017 (15:28 IST)

ஹெல்மெட் அணிந்தவாரே அலுவலங்கலில் பணி புரியும் ஊழியர்கள்: காரணம் என்ன??

பீகாரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு பணியாற்றும் சம்பவம் நடைபெற்று வருகிறது.


 
 
பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், ஊழியர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு ஹெல்மெட் அணிந்து பணிபுரிகின்றனர்.
 
அலுவலகத்தின் மேற்கூரையிலிருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் ஸ்லாப்புகள் பெயர்ந்து விழுகின்றது என்வே பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்கிறோம் என கூறியுள்ளனர்.
 
அந்த கட்டிடம் அபாயகரமானது என்று கடந்த ஆண்டே அறிவித்த போதும் அரசு அவர்களுக்கு புதிய கட்டிடம் ஒதுக்கவில்லை. பீகார் ஊழியர்களுக்கு எப்பொழுது விடிவுகாலம் பிறக்கும் என பார்ப்போம்.