1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (02:01 IST)

ஸ்ரீதேவிக்கு கடைசியாக மேக்கப் போட்ட மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அதிர்ச்சி பேட்டி

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாய்க்கு திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவருடைய மறைவை இன்னும் அவருக்கு நெருக்கமானவர்கள் நம்ப முடியாமல் திகைத்து போயுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீதேவி கலந்து கொண்ட துபாய் திருமணத்திற்கு  செல்லும் முன் அவருக்கு மேக்கப் போட்டவர் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சுபாஷ் ஷிண்டே. ஸ்ரீதேவி இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத சுபாஷ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

துபாயில் நடந்த அவரது உறவினர் மொஹித் மார்வா திருமணத்திற்கு செல்லும் முன் நான் தான் அவருக்கு மேக்கப் போட்டேன். அன்று அவர் வழக்கத்தைவிட மிக அழகாக காட்சியளித்தார். மேலும் கூடுதல் மகிழ்ச்சியுடனும் அவர் இருந்தார். சனிக்கிழமை மாலை அவருக்கு மேக்கப் போட்டுவிட்டு நான் மும்பை திரும்பிவிட்டேன். காலையில் கண்விழித்து பார்த்தபோது அவர் மரணம் அடைந்தார் என்ற செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை

மேக்கப்மேனை மட்டுமின்றி அவரிடம் வேலை பார்க்கும் அனைவரையும் அவர் தன்னுடைய குடும்பத்தினர் போலவே பார்த்து கொள்வார். அவருடைய மரணம் எங்களை போன்றவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும் 'என்று சுபாஷ் ஷிண்டே கூறியுள்ளார்,.