1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (14:15 IST)

மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் - சோனியா காந்தி

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில், மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் அதனையே பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த 2 மாநிலங்களிலும் ஆட்சியமைக்கப் போகும் கட்சி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், ஆக்கப்பூர்வமான கட்சியாக காங்கிரஸ் செயல்படும் எனவும் சோனியா தெரிவித்துள்ளார்.
 
இதேபோல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள பாரதீய ஜனதா கட்சிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
 
மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மக்களின் நம்பிக்கையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபடும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.