1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (17:52 IST)

என் கணவர் ஒரு செக்ஸ் வெறியர் - நடிகை பகீர் பேட்டி

தொடர்ந்து உறவுக்கு அழைத்ததால் மறுப்பு தெரிவித்ததால் தனது கணவர் தன்னை கொலை செய்ய முயன்றார் எனவும், கணவரை விட்டு பிரிந்து விட்டதாகவும் பாலிவுட் நடிகை சோபியா ஹயாத் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

 
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சோஃபியா ஹயாத். பிரபல மாடலான இவர் ரோமோனிய நாட்டை சேர்ந்த விளாட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
விளாட்டை திருமணம் செய்வதற்கு முன்பு அவருடன் பல இடங்களுக்கும் சென்று நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை சூடேற்றி வந்தார் சோபியா.

 
இந்நிலையில், தனது கணவர் மீது அடுக்கடுக்கான புகார்கள தற்போது சோபியா கூறியுள்ளர். அவர் ஒரு பொய்யன்.. திருடன்.. அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்தும் அவரை நான் ஏற்றுக்கொண்டேன். அவருக்கான அனைத்து செலவுகளையும் நானே செய்தேன். அவர் பிரபலமாக நான் மட்டுமே காரணம். எங்கள் திருமண மோதிரத்தை ரூ.1.5 லட்சத்திற்கு விற்று விட்டார். அது தெரிந்து நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். 
 
ஆனாலும், அவருக்கு நல்ல மனைவியாக நடந்து கொண்டேன். அதனால், தாய்மையும் அடைந்தேன். ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் என்னை அவர் செக்ஸுக்கு அழைத்தார். நான் மறுப்பு தெரிவிக்க, கோபத்தில் என் கழுத்தை பிடித்து நெறித்தார். நல்லவேளையாக தற்போது அவரை விட்டு பிரிந்து விட்டேன். எனவே, தற்போது உயிரோடு இருக்கிறேன். விளாட்டின் அதீத காம ஆசை காரணமாகவே அவரை விட்டு பிரிந்ததாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.