வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (21:53 IST)

‘பாரத விழா’ ஆகிறது சுதந்திர தினம்

நாட்டின் 70-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை ‘‘பாரத விழா’’ என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

 
இதையொட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளது. தொடக்க விழா, 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்தியா கேட் பகுதியில் நடைபெறுகிறது.
 
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ராஜபாதையில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படும் என்றும், அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மக்களின் பழக்க - வழக்கங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த அரங்குகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், பாரத விழா கலை நிகழ்ச்சிகளில் எல்லா மாநில இசை கலைஞர்களும் பங்கேற்பார்கள் என்பதுடன், ராணுவ வீரர்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.