கள்ளக்காதலுடன் சேர்ந்து தம்பியை எரித்து கொன்ற அக்கா
உத்திரபிரசேத மாநிலத்தில் கள்ளக்காதலுடன் சேர்ந்து அக்கா தம்பியை எரித்து கொலை செய்துள்ளார்.
உத்திரபிரசேத மாநில, புலன்சாகர் என்ற பகுதியில் உள்ள இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண், காதலனை வீட்டுக்கு அழைத்து, இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் தம்பி லலித்(12) திடீரென்று வீட்டுக்கு வந்துள்ளான்.
அவர்கள் ஒன்றாக இருப்பதை பார்த்து விட, அந்த பெண் மற்றும் அவரது காதலன் லலித்தை கட்டி, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டுள்ளனர். அதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான்.
அந்த சிறுவனின் அக்கா மற்றும் அவரது காதலன் இருவரும் வீட்டை விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.