1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2017 (15:41 IST)

பாஜக-வை பின்னுக்குத் தள்ளிய சிவசேனா

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில் மும்பையில் பாஜக-வை பின்னுக்குத் தள்ளி, சிவசேனா முன்னிலை வகிக்கிறது.


 

 
மாகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன் நடைப்பெற்றது. இதில் தேதிய காங்கிரஸ் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் போட்டியிட்டது. 
 
இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் முன்னிலை வகித்து வருகின்றனர். இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு கட்சிகள் மாகாராஸ்டிரா மாநிலம் முழுவதும் தற்போது முன்னிலையில் உள்ளனர்.
 
மும்பை மாநகராட்சியில் சிவசேனா கட்சி 94 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. புனே, நாக்பூர், சோலாபூர் ஆகிய இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.