1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (17:01 IST)

சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என கூறவில்லை - தினகரன்

சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் கூறவில்லை என  அமமுக பொதுச்செயலாளர் தினகரம் தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு அதிமுக கட்சி கொடியுள்ள கார் கொடுத்ததாக 7 பேர் அதிரடியாக அதிமுக தலைமையால் நீக்கப்பட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா விரைவில் எல்லோரையும் சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது:

சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் கூறவில்லை.அப்படி ஊடகங்கள் தான் கூறின. சகிகலாவை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே அவர் ஓய்வு முடிந்தபின்னர் தான் வெளியே வருவார் எனத்தெரிவித்துள்ளார்.