1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel

ரூ.250 மதிப்புள்ள ஸ்மார்ட்ஃபோன் டெலிவரி

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரூ.250 மதிப்புள்ள ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 
 

 
ரூ.250 மதிப்புள்ள ஸ்மார்ட்ஃபோன், ஃப்ரீடம் 251 என்று பெயரிடப்பட்டு இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவிப்பு வெளியானது. ஏழு கோடி பேர், இந்த போனுக்காக இணையதளத்தில் பதிவு செய்தனர். இது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், 250 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்ஃபோன், வெள்ளிக்கிழமை முதல் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று ரிங்கிங் பெல்ஸ் என்ற இந்திய நிறுவனம் அறிவித்தது.
 
இது குறித்து, அந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மோஹித் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான்கு அமெரிக்க டாலர் அல்லது மூன்று பிரிட்டன் பவுண்டுகளுக்குக் குறைவான விலையுள்ள இந்த ஸ்மார்ட் போன்கள், முதல் கட்டமாக 5 ஆயிரம் பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.