வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2016 (20:13 IST)

டெங்கு காய்ச்சல் விவகாரம்: சுகாதார மந்திரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

டெல்லியில் டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்கன் குனியா நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை கண்டித்து அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


 

 
டெல்லியில் டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்கன் குனியா நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் உச்ச நீதிமன்றம், நோய் பரவாமல் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. 
 
இதையடுத்து டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலை கண்டறிய அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் அந்த அதிகாரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடாமலும் இருந்தார்.
 
அதனால் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை கண்டித்து அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.