வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (19:29 IST)

கருப்பு பணத்தை பற்றி எந்த தகவலும் இல்லை: கைவிரித்த ஆர்பிஐ!!

மத்திய அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஒழிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் கறுப்பு பணம் பற்றி எந்த தகவலும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
கடந்த வாரம் ரிசர்வ் வங்கி, 99 சதவிகித பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்தது. ஆனால், கருப்பு பணம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளால் ஒழிக்கப்பட்ட கறுப்பு பணம் பற்றி எந்த தகவலும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.