வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (22:25 IST)

ஆண்களை வாடகைக்கு எடுக்க அறிமுகமாகியுள்ள புதிய ஆப்

பெண்களை வாடகைக்கு எடுத்து அவர்களுடன் ஒருநாள் முழுவதும் சுற்றிக்கொள்ள வகை செய்யும் ஆப் இந்தியாவில் அதிகம் உள்ளது. இந்த நிலையில் ஆண்களை இரண்டு மணி நேரத்திற்கு வாடகைக்கு எடுத்து கொள்ள வசதியாக ஒரு புதிய ஆப் அறிமுகமாகியுள்ளது.

இப்போதைக்கு மும்பை மற்றும் புனேவில் மட்டும் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் பெண்கள், தங்களுக்கு பிடித்த ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்து அவர்களுடன் ஊர் சுற்றலாம். மேலும் ஆண்களை அழைத்து கொண்டு சொகுசு விடுதிகள், தங்குமிடத்திற்கு செல்லக்கூடாது. உறவு வைத்து கொள்ளவும் கூடாது என்பது இந்த ஆப் கொடுத்துள்ள கண்டிஷன்

இந்த ஆப், பெண்களின் மன அழுத்தத்தை குறைக்கும் என இந்த ஆப்-ஐ வடிவமைத்தவர் கூறியுள்ளார். இருப்பினும் இதுவொரு கலாச்சார சீரழிவு என்றும் இந்த ஆப்-ஐ இந்தியாவில் செயல்பட அனுமதிக்க கூடாது என்றும் பலர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.