1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2015 (13:23 IST)

20 பெண்களை கடத்தி கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு சாகும் வரை சிறை

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் இரண்டு பேர் 20 பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு, அவர்களுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார்.
 
கர்னூலை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ரவிக்குமார், ஸ்ரீனிவாசலு. கடந்த 2013 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவியை ஆட்டோவில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்தனர். அதன் பின்பு இரும்பு கம்பியால் மாணவியை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மாணவியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட, 20 நாட்களுக்கு பிறகு சுயநினைவு திரும்பியது. அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசாரிடம் விவரித்தார்.
 
இதற்கிடையே மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்கள் வேறு வழக்கில் போலீசில் சிக்கினர். தன்னை கற்பழித்தவர்களை அடையாளம் காட்டினார் மாணவி. கைதான ஆட்டோ டிரைவர்கள் பெண்களை கடத்தி கற்பழிப்பதை ஒரு பொழுதுபோக்காக நடத்தி வந்தனர். 20 பெண்களை கற்பழித்ததாக அவர்கள் கூறினார்கள்.
 
இவர்கள் மீதான வழக்கு கர்னூலில் நேற்று நடைபெற்றது. இதில் 2 ஆட்டோ டிரைவர்களுக்கும் சாகும்வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஜோதிர்மயி தீர்ப்பு வழங்கினார். மேலும் இருவருக்கும் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும் விதித்தார்.