மழை வெள்ள நிவாரணத்திற்கு ரூ.3,819 கோடி தேவை: சந்திரபாபு நாயுடு கடிதம்
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்திற்கான நிவாரணத்திற்கு ரூ.3,819 கோடி வேண்டும் என்ற மத்திய அரசுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தில் கனமழைபெய்தது.
இதனால் நெல்லூர், சித்தூர், கடப்பா, உள்ளிட்ட ஆகிய 8 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமாயின.
முன்னதாக, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிவாரணத்திற்காக ரூ.1000 கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், வெள்ள சேதம் குறித்து, மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்தி மதிப்பீடு செய்து, ஆந்திர அரசு அறிக்கை தயார் செய்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக ரூ.3819.9 கோடி ஒதுக்கும்படி கோரி மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் அனுப்பியுள்ளார்.
திமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.