1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (08:49 IST)

உலகத்துல யாருக்குமே பயப்பட மாட்டேன்! – டைமிங்கில் ட்வீட் போட்ட ராகுல் காந்தி!

உத்தர பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை பார்க்க சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டனர். எல்லையில் தடுக்கப்பட்டும் மீறி ராகுல் காந்தி செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி “உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன். பொய்யை உண்மையின் துணையுடன் வெல்வேன். பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும். காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்”