1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (08:38 IST)

பரோல் அளித்தும் வெளியே செல்ல விரும்பாத கைதிகள்! ஏன் தெரியுமா?

மகாராஷ்டிராவில் பரோலில் வெளியே அனுப்ப முடிவு செய்தும் 26 கைதிகள் செல்ல முடியாது எனக் கூறியுள்ளார்களாம்.

கொரோனா காரணமாக சிறைகளில் கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் கைதிகளுக்கு பரோல் அளித்து வெளியே அனுப்பும் முடிவுகளை சிறைத்துறை நிர்வாகம் எடுத்துள்ளது. ஆனால் அப்படி அளித்தும் மகாராஷ்டிராவில் 26 கைதிகள் தங்களுக்கு பரோல் வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்களாம். அதற்கு பெரும்பாலான கைதிகள் சொல்லும் காரணம் ‘லாக்டவுன் நாட்களில் குடும்பத்தினருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. வெளியே சென்றால் எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்காது’ எனக் கூறியுள்ளார்களாம்.