வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (08:12 IST)

சபரிமலையில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம்: பெரும் பரபரப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்ததை அடுத்து கடந்த மாதம் ஒருசில பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு சென்றனர். ஆனாலும் சன்னிதானம் அருகே அவர்களை பக்தர்கள் நெருங்கவிடவில்லை. இதனையடுத்து கேரள அரசு பெண்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கார்த்திகை மாத பூஜையை அடுத்து நாளை ஐயப்பன் கோவில் திறக்கப்படவுள்ளது. இந்த மாதமும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றே பத்திரிகையாளர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல கேமிராவுடன் செய்தி சேகரிக்க வந்துள்ளனர். ஆனால் சபரிமலைக்கு செல்ல முயன்ற பத்திரிகையாளர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பத்திரிகையாளர்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும்  என்று வலியுறுத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.