வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : புதன், 23 ஜூலை 2014 (19:15 IST)

துவா பிரார்த்தனைகளில் பங்கேற்றார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

ரமலான் மாதத்தில் குரான் உரையை முடித்த தினத்தை குறிக்கும் நாள் காதம் சரிப் (Khatam Shareef). இந்த நாளையொட்டி, துவா பிரார்த்தனைகளில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். 
 
இந்தப் பிரார்த்தனைகள் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள மசூதியில் 2014 ஜூலை 20ஆம் தேதி நடைபெற்றது. 
 
இதில் நாட்டு மக்களின் நல்ல ஆரோக்கியத்துக்கும் நலனுக்கும் குடியரசுத் தலைவர் பிரார்த்தனை செய்தார். 
 
மேலும் 2014 ஜூலை 21ஆம் தேதி, குடியரசுத் தலைவர் மாளிகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுக்கும் பிரணாப் முகர்ஜி ஏற்பாடு செய்திருந்தார்.
 
அந்த நிகழ்ச்சியின் சில படங்களை இங்கே காணலாம்.