விநாயகர் சதுர்த்தி விழா: பிரணாப் முகர்ஜி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, குடிரயசு தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
இந்த சந்தோஷமான நேரத்தில் நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விநாயகப் பெருமானின் அருளால் மக்கள் ஞானம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெற்றுவதோடு, எல்லையில்லா வெற்றிகளை குவிக்க வேண்டும். இந்த நாட்டில், அன்பு, அமைதி, சமாதானம் நீடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.