1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (13:38 IST)

ராகுல் காந்தியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு: போஸ்டரால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி தற்போது எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பரிசு வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
 
அந்தப் போஸ்ட்டரில், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி சில வாரங்களுக்கு விடுப்பில் செல்வதாக தகவல் வெளியானது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
 
ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், அமேதி மற்றும் உத்தரப் பிரதேச மாநில மக்களுக்குத் தேவையான நிதியை பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ராகுல் காந்தி விடுப்பு எடுத்து சென்றுள்ளார்.
 
அவர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்குமே தெரியவில்லை. அவரை இன்னும் 2 நாட்களுக்குள் கண்டுபிடித்து தகவல் கொடுப்பவருக்கு மிகப்பெரிய ரொக்க பரிசு வழங்கப்படும் என்று லக்னோ, அலகாபாத் மற்றும் அமேதி தொகுதிகளின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் காணப்பட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நேரு, இந்திரா காந்தி வாழ்ந்த ஆனந்த பவன் இல்லத்தின் வாசலிலும் இந்த போஸ்டர்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.