வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2015 (18:20 IST)

புகார் கொடுக்க வந்த கணவன் மனைவியை நிர்வாணம் ஆக்கிய போலிசார் : வீடியோ

காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த ஒரு தம்பதியை நிர்வாணமாக்கிய போலிசாரைப் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு, வழிப்பறியைப் பற்றி புகார் கொடுக்க தலித் இனத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். ஆனால் அவர்களின் புகாரை போலிசார் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
 
இதனால் கோபமடந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
அப்போது நடந்த சண்டையில், காவலர்களில் சிலர் கணவன் மனைவி இருவரையும் ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். கையில் குழந்தையோடு நிர்வானமாக ரோட்டில் நிற்கும் பெண்ணை பார்த்து அங்கிருந்த்த பொதுமக்கள் அதிர்ச்சியானார்கள்.அங்கு நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்த ஒருவர், அதை தன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய, இப்போது அந்த வீடியோ வைரலாக வலம் வருகிறது. 
 
இது சம்பந்தமாக, காவல் துறை சிலரை கைது செய்துள்ளதாகவும், அதில் அந்த தம்பதியும் அடங்குவார்களா என்பது தெரியவில்லை.