வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (04:03 IST)

பெண் சப் - இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஐஜி சஸ்பெண்ட்

சத்தீஸ்கர் மாநிலத்தில், பெண் சப் - இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறை ஐஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
 

 
சத்தீஸ்கர் மாநிலம், ராயப்பூரில் உள்ள மாநில தலைமை காவல்துறை அலுவலகத்தில்  உளவுத் துறை கூடுதல் போலீஸ் ஐஜியாக பணியாற்றிவர் சஞ்சய் சர்மா.
 
கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி இவர் தலைமை காவல்துறை அலுவலகத்தில் தரை தளத்தில் இருந்து மேல் தளத்துக்கு லிப்ட்டில் சென்றுள்ளார். அப்போது, அதே  லிப்டில் அவருடன் பெண் சப் - இன்ஸ்பெக்டர் ஒருவரும் சென்றுள்ளார். லிப்ட் மேலே சென்று கொண்டிருந்த சமயத்தில், அந்த சப்-இன்ஸ்பெக்டரை கட்டிப் பிடித்து ஐஜி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
 
இது குறித்து, மகளிர் வன்கொடுமை தடுப்புக் குழுவில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் புகார் செய்தார். இது குறித்து அந்த குழு தீவிர விசாரணை நடத்தியதில், பெண் சப் - இன்ஸ்பெக்டருக்கு காவல்துறை ஐஜி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
 
இதனையடுத்து, போலீஸ் ஐஜி சஞ்சய் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உள்துறை அமைச்சர் ராம்சேவக் உத்தரவிட்டார்.