1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (08:55 IST)

15 மாதங்களுக்கு பின் வெளிநாடு கிளம்பினார் பிரதமர் மோடி!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை தவிர்த்து வந்த பிரதமர் மோடி தற்போது 15 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வெளிநாடு சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்
 
பிரதமர் மோடி இன்று இரண்டு நாள் பயணமாக இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். வங்கதேச நாட்டின் 50வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதற்கு முன்னர் 15 மாதங்களுக்கு முன்னர்தான் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் செய்த நிலையில் தற்போது தான் அவர் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.