1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 21 நவம்பர் 2016 (16:13 IST)

பான் மசாலா வியாபாரி வங்கி கணக்கில் ரூ.10 கோடி: அதிர்ந்த அதிகாரிகள்

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தைச் சேர்ந்த பப்புகுமார் திவாரி என்பவர் வங்கி கணக்கில் ரூ.10 கோடி இருப்பதைக்கண்டு  வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


 

 
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தைச் சேர்ந்த பப்புகுமார் என்பவர் பான் மசாலா விற்பனை தொழில் செய்து வருகிறார். அவர் ஸ்டேட் பாங்க் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முடியாமல் போனதால் பப்பு வங்கி சென்றுள்ளார்.
 
அங்கு அவர் ஆயிரம் ரூபாய் பெற சீட்டு எழுதிக்கொடுத்துள்ளார். அவரது சேமிப்பு கணக்கில் ரூ.10 கோடி இருப்பதைக்கண்டு வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் பப்புகுமாரிடம் கேட்ட போது, இந்த தொகை எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றார்.
 
இதையடுத்து வங்கி அதிகாரிகள் காவல்துறையினருக்கு தெரிவித்ததையடுத்து, காவல்துறையினர் பப்புகுமாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் பப்புகுமாரின் சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டது. ரூ.10 கோடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.