1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (23:28 IST)

இனிமேல் அவசர வழக்குகள் கிடையாது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி

ஒரு குறிப்பிட்ட வழக்கை பதிவு செய்து அதனை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஐகோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை அடிக்கடி பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் ஒருசில வழிமுறைகள் வகுக்கப்படும் வரை, அவசர வழக்கு விசாரணை கிடையாது என இன்று சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

யாராவது ஒருவரை நாளையே தூக்கில் போட வேண்டுமா? அல்லது நாளையே யாரையாவது நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமா? அவ்வாறு இருந்தால் மட்டுமே அவசர வழக்காக கொண்டு வாருங்கள் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். இதனால் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.