1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2016 (12:59 IST)

சிறுமிகளை ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தையும் மகனும்!

சிறுமிகளை ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தையும் மகனும்!

ஹைதராபாத்தில் 9 வயதான இரட்டை சிறுமிகளை 16 வயது சிறுவனும் அவனது தந்தையும் கடந்த ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


 
 
பாதிக்கப்பட்ட அந்த இரட்டை சிறுமிகளின் வீட்டருகே வசித்து வருபவர் ஜாஃபர். இவரும் இவருடைய 16 வயது மகனும் கடந்த ஒரு வருடமாக அந்த சிறுமிகளை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்த குற்ற செயலுக்கு அந்த சிறுமிகளின் குடும்ப உறுப்பினர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த சிறுமிகள் தாங்கள் கடந்த ஒரு வருடமாக பலாத்காரம் செய்யப்பட்டு வருவதை தங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர் ஒருவர் மூலம் வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
 
அவர் குழந்தைகள் உரிமைகளுக்காக செயல்படும் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழும், போஸ்கோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் துறையினர் இது வரை யாரையும் கைது செய்யவில்லை என அந்த தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. அந்த சிறுவன் மைனராக இருப்பதால் அவனை கைது செய்ய முடியாத நிலையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் நேபாளத்தை சேர்ந்தவர்கள் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.