1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 14 அக்டோபர் 2015 (05:30 IST)

நெல்லை - திருவனந்தபுரத்திற்கு சுவிதா சிறப்பு ரயில்

தீபாவளி பண்டியை முன்னிட்டு, நெல்லை - திருவனந்தபுரத்திற்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
 

 
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை டூ நெல்லை மற்றும் சென்னை டூ திருவனந்தபுரம் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
 
சென்னை எழும்பூரில் இருந்து சுவிதா சிறப்பு ரயில் (எண்.00622) நவம்பர் 6ஆம் தேதி அன்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
 
மறுமார்க்கத்தில், அதாவது நெல்லையில் இருந்து (எண்.00623) நவம்பர் 11ஆம் தேதி  மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.05 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கோவில்பட்டி போன்ற ரயில்  நிலையங்களில் நின்று செல்லும்.
 
அதே போல, சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுவிதா சிறப்பு ரயில் (எண்.00621) நவம்பர் மாதம் 6ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
 
மறுமார்க்கத்தில், அதாவது திருவனந்தபுரத்தில் இருந்து (எண்.06103) நவம்பர் 8 ஆம் தேதி தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ரல் வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 14ஆம் தேதி முதல் தொடங்குகிறது.