செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2017 (12:35 IST)

தேசிய விருது பெற்ற வாலிபர் விபத்தில் பலி

இந்தியா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்து தேசிய விருது பெற்ற  கேரளாவைச் சேர்ந்த குரியன் ஜேக்கப் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கோட்டயம் திருவல்லா நகரை சேர்ந்த ஜேக்கப்பின் மகன் குரியன் ஜேக்கப்(25), இவர் இந்தியா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்து தேசிய விருது பெற்றவர். குரியன் ஜேக்கப் தனது நண்பர்களை பார்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த சுற்றுலா பேருந்து எதிர்பாராத விதமாக ஜேக்கப்பின் இரு சக்கர வாகனத்தின் மேல் மோதியது.
 
இதில் படுகாயமடைந்த ஜேக்கப்பை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ஜேக்கப் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.