1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bharathi
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (13:07 IST)

நாட்டின் முன்னேற்றத்திற்காகவே அரசு பாடுபடுகிறது: நரேந்திர மோடி

நாட்டை முன்னேற்றப்பாதையில் செலுத்தவே அரசு பாடுபடுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார் .விழா நிறைவடைந்த பின்பு உடனடியாக மத்யன்ஜல் பவனுக்கு சென்ற மோடி அங்கு நடைபெற்ற பா.ஜ.க., ஆர்.எஸ். எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். சுமார் 15 நிமிடம் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மத்தியில் மோடி உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், " நாட்டை முன்னேற்றப்பாதையில் செலுத்தவே அரசு பாடுபடுகிறது. எங்களது முயற்சிக்கான பலனை விரைவில் காணலாம்" என்றார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் இடையேயான ஆலோசனைக் கூட்டம் நேற்றோடு நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் பொருளாதாரம், கல்வி, தேசிய பாதுகாப்பு, உள்ளிட்டவைகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் ஆலோசனை மற்றும் கருத்துக்களை பா.ஜ.க. தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.