வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (13:06 IST)

காவிரி பிரச்சனை: ஒரு வழியாக வாய் திறந்த மோடி!!!

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனை குறித்து தாமதமாக மோடி பேசியுள்ளார்.


 
 
கர்நாடகாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்தும் வன்முறையை கட்டுக்குள் கொண்டவர முடியவில்லை. துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டும் பயனில்லை. இதனையடுத்து பல்வேறு தரப்பும் கர்நாடக அரசு நிலமை மோசமாகியும் மவுனமாக இருக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டனங்களை தெரிவித்தனர். 
 
இதனால் மோடி இரு தரப்பு மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர், ‘பொறுப்புகளை உண்ர்ந்து இரு தரப்பு மக்களும் செயல் பட வேண்டுமெனவும், பேச்சு வார்த்தை மூலமாக பிரச்சனைக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும், மேலும் கர்நாடக மற்றும் தமிழ் மக்கள் அமைதியாக இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என கூறியுள்ளார்.