1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By caston
Last Modified: சனி, 29 ஆகஸ்ட் 2015 (13:45 IST)

ரக்‌ஷா பந்தன்: தலைவர்கள் உற்சாக கொண்டாட்டம்

நாடு முழுவதும்  ரக்‌ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். மத்திய வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ் தலைநகர் டெல்லியில் இன்று  மத்திய அமைச்சர் வெங்கையா  நாயுடுவுக்கு ரக்‌ஷா பந்தன் கயிறு கட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிரதமர்  நரேந்திர மோடி ட்விட்டரில் நாட்டு  மக்களுக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்  குழந்தைகளுடன் இவ்விழாவை  கொண்டாடினார். மேலும் கூலித் தொழிலார்கள் அவருக்கு ரக்‌ஷா பந்தன் கயிறு கட்டினர். மேலும்  அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்  குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன்  கொண்டாடினார். பின்னர் மரத்திற்கு  ரக்‌ஷா பந்தன் கயிறு கட்டினார். இதற்கிடையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் சகோதிரியுடன் ரக்‌ஷா பந்தன்  கொண்டாட ஹரித்வார் சென்றுள்ளார். காங்கிரஸ் தேசிய துணை தலைவர்  ராகுல் காந்தி ட்விட்டரில் நாட்டு  மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.