வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2017 (20:05 IST)

பெற்றோரின் சம்மத்துடன் பட்டதாரி திருநங்கையுடன் திருமணம்

ஒடிசாவில் எம்பிஏ பட்டாதாரியான பாசுதேவ் நாயக், இளம் திருநங்கையை பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துக்கொண்டார்.


 

 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மேகா என்ற திருநங்கை, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மேகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அவரது பெற்றோர்கள் மாப்பிளை தேடி வந்துள்ளனர்.
 
அப்போது மேகா வசிக்கும் அதே பகுதியில் இருக்கும் பாசுதேவ் நாயக் என்பவர் மேகாவை திருமணம் செய்துக்கொள்ள விரும்பியுள்ளார். பாவுதேவ் நாயக்கின் விருப்பத்திற்கு அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து புவனேஷ்வரில் பாசுத் நாய்க மற்றும் மேகா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது.