1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2014 (15:53 IST)

5 வயது சிறுவனின் உயரம் 5 அடி 7 அங்குலம்

உத்தர பிரதேசத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் 5 அடி 7 அங்குலம் உயரம் உள்ளதால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
 
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கரண் சிங் என்னும் சிறுவனுக்கு 5 வயதாகிறது. இவர அவர் வயதுள்ள சிறுவர்கள் போல இல்லாமல் இப்போதே  5 அடி 7 அங்குலம் உயரம் இருக்கிறார்.
 
பள்ளியில் கின்டர்கார்டன் சேர்ந்த போது கரணிடமிருந்து மற்ற சிறுவர்கள் விலகியே இருந்ததாக கூறும் அவரது தந்தை சில நாட்களில் கரணுடன் பிற சிறுவர்கள் நண்பர்களாகி விட்டதாக குறிப்பிட்டார்.
 
கரணின் 25 வயது தாய் ஷ்வேட்லனா சிங்கின் உயரம் 7 அடி 2 அங்குலம். 2012 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உயரமான பெண் என்னும் கின்னஸ் பட்டம் பெற்றிருந்த இவர் 2 ஆண்டுகளில் 4 அங்குலம் வரை இப்போதும் வளர்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.