வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (15:05 IST)

பாபநாசம் பட பாணியில் கொலையை மறைக்க முயன்ற நபர் கைது

பீகாரை சேர்ந்த ஒரு நபர் தான் ஒரு கொலையை செய்துவிட்டு, கமல் நடித்து வெளியான பாபநாசம் படத்தில் வருவது போல், அந்த கொலையை மறைக்க முயன்று தற்போது போலீசில் சிக்கியுள்ளார்.


 

 
பீகார் மாவட்டம் வைஷாலியை சேர்ந்தவர் ரஜ்னீஷ் சிங். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆனால் தன்னுடையை மனைவி அதிகம் படிக்காதவர். அதனால் மனைவிக்கு தெரியாமல், இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார் ரஜ்னீஷ்.
 
அதற்காக ஒரு திருமண சம்பந்தப்பட்ட ஒரு இணையதளத்தில் தனது பெயரை பதிவு செய்து பெண் தேடியுள்ளார் ரஜ்னீஷ். மேலும் தான் பெரும் பணக்காரர் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி இந்தூரை சேர்ந்த சிருஷ்டி ஜெயின் என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். இருவரும் நேரில் சந்திக்க விரும்பினார்கள். 
 
அதன்படி கடந்த ஜனவரி 25ஆம் தேதி இருவரும் பாட்னாவில் சந்தித்து பேசியுள்ளார்கள். அப்போது ரஜ்னீஷ் பற்றிய நிஜமான தகவல்களை சிருஷ்டி தெரிந்து கொண்டார். இதனையடுத்து உங்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து ரயில்வே நிலையத்திற்கு சென்றுவிட்டார்.
 
இதனால் கோபமடைந்த ரஜ்னீஷ் அவர் பின்னாலேயே சென்று அவரை பிடித்து நிறுத்தி பேசியுள்ளார். ஆனால் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த ரஜ்னீஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கி மூலம் அவரை சுட, சிருஷ்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடனே அங்கிருந்து ரஜ்னீஷ் தப்பி ஓடிவிட்டார்.
 
அந்த கொலையிலிருந்து தப்பிக்க நினைத்த ரஜ்னீஷ், தனது செல்போனை ஒரு லாரியில் போட்டு விட்டார். மேலும், ஒரு படகோட்டிக்கு ரூ. 500 கொடுத்து, தனது  பைக்கை கங்கை ஆற்றில் போட்டு விட்டார். 
 
ஆனாலும் அவர் போலீசிடம் மாட்டிக் கொண்டார். எப்படியெனில், அவர் லாரியில் தூக்கியெறிந்த செல்போன் தவறி ரோட்டில் விழுந்து விட்டது. அதை அவர் கவனிக்கவில்லை. எனவே அதன் மூலம் அவர் போலிசாரிடம் சிக்கியுள்ளார்.